<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10025998</id><updated>2011-10-02T02:02:39.574-07:00</updated><title type='text'>அரட்டைக் கச்சேரி</title><subtitle type='html'>கண்ணனின் இசை அரட்டைகள்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://arattaikutcheri.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://arattaikutcheri.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Kannan</name><uri>http://www.blogger.com/profile/10853363475302869506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10025998.post-112910127113460690</id><published>2005-10-12T00:12:00.000-07:00</published><updated>2005-10-12T00:14:31.146-07:00</updated><title type='text'>ராஜ்குமார் பாரதி</title><content type='html'>&lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;ஒரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நான்  கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, கோயமுத்தூரில் கொஞ்சமாக நடக்கும்  கச்சேரிகளுக்கெல்லாம் தவறாமல் போய்விடுவேன். இப்படியாக ஒரு நாள் ஆர்.எஸ்.புரம் ராவ்  வீட்டில் ஒரு கச்சேரி. காம்பவுண்ட் உள்ளே பந்தல் போட்டு, நாங்கள் 'கித்தான்' என்று  விளிக்கும் மெல்லிசான சாக்குத் துணி விரித்திருப்பார்கள். உட்கார்ந்திருக்கும்போது  திடீரென்று அங்கங்கே குத்தும். இங்கு பளிச்சென்ற முகத்துடன், கண்ணாடி போட்ட இளைஞர்  மிடுக்காகப் பாடிக் கொண்டிருந்தார். சஞ்சய், உன்னிகிருஷ்ணன் என்ற இளைஞர் பட்டாளம்  அப்போது தலையெடுக்கத் தொடங்கினாலும், கோவையில் அவ்வளவு பிரபலம் இல்லை. அதுவரை,  பாரம்பரிய இசை வயதானவர்களுக்காய் என்று நினைத்திருந்த  நான் போன முதல் இளைஞர்  கச்சேரி இதுதான். கணீர் குரலில், தெளிவான உச்சரிப்புடன் முன்பதிவு செய்யப்பட்ட  நிகழ்ச்சியின் நேர்த்தியுடன் கொஞ்சம் கூடப் பிசிறில்லாமல் பாடிக்கொண்டிருந்த  ராஜ்குமார் பாரதியின் பாட்டு உடனே பிடித்துப் போனது. இந்தக் கச்சேரியின் மத்தியில்  இவர் சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப் பேரர் என்று அறிவித்த போது, இன்னும்  மரியாதையும் வியப்பும் கூடியது.&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;    அன்றுமுதல் இவர் கச்சேரிகளைத் தேடிப் பிடித்துக்  கேட்கலானேன். முன் சொன்னதுபோல, மிக நேர்த்தியாகப் பாடக்கூடியவர் இவர். இவரது குரல்  மந்த்ரஸ்தாயி மத்யமத்தில் இருந்து உச்சஸ்தாயி பஞ்சமம் வரை பாயும், இவர் சொல்  கேட்கும். நல்ல பயிற்சி தெரியும். இவரது ராக ஆலாபனை அறிவுக்கும் உணர்வுக்கும்  ஒருங்கே நிறைவளிக்கக் கூடியது. ஸ்வரங்கள் பாடும்போது நிறைய கணக்கு வழக்குகள் செய்து  தாளவாத்தியக்காரரை நிமிர்ந்து உட்காரச்செய்வார். தெலுங்காகட்டும், கன்னடமாகட்டும்,  சம்ஸ்க்ருதம் ஆகட்டும், இவர் உச்சரிப்பின் தெளிவினால் பாட்டை உடனே எழுதிக் கொண்டு  விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இவரது குரல் - ஆகா! கணீரென்ற, அதே சமயம்  தேனொழுகும் குரல்வளம். வடக்கத்திய (ஹிந்துஸ்தானி) இசையிலும் பயிற்சியுள்ள இவர்  குரல்வளத்தையும் பயிற்சி செய்து மேம்படுத்தியுள்ளார் என்று தெரிந்து கொண்டேன்.  இவரது குரலில் பாரதியார் பாட்டு கேட்க வேண்டும் - அந்தப் பாடல்களுக்கு இன்னும்  உணர்ச்சியும் உயிரும் வந்துவிடும்! நான் மிகவும் விரும்பிக் கேட்பவை இவை!  &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;பெங்களூரில்தான் இவர் கச்சேரிகளை மிகுதியும்  கேட்டிருக்கிறேன். இடம், பொருள் அறிந்து பாடும் இவருக்கு பெங்களூர் சபாக்கள் போட்டி  போட்டுக் கொண்டு அழைப்பு விடுக்கும். இவர் பாடும் புரந்தர தேவர் நாமாக்களைக்  கேட்டுப் பாராட்டிக்  கன்னடத்தில் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படியாக ஒரு ராம நவமி  கச்சேரிக்குப் போயிருந்தேன். அறிவித்தபடி ராஜ்குமார் பாரதி பாடவில்லை - வருத்தப்  பட்டு, உணர்ச்சிகரமாக, நிகழ்ச்சியமைப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.   அதற்கப்புறம் அவர் நிகழ்ச்சி எங்கும் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஞாயிறு காலை ஜெயா டிவியில்  ராகமாலிகா நிகழ்ச்சியில் நடுவராகப் பார்த்தபோது சந்தோஷமாயிருந்தது. அவர் நல்ல  உடல்நலத்துடன் பலகாலம் சிறப்பாய் வாழ்ந்து எம்மையெல்லாம் பாடி மகிழ்விக்க  வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10025998-112910127113460690?l=arattaikutcheri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arattaikutcheri.blogspot.com/feeds/112910127113460690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10025998&amp;postID=112910127113460690' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/112910127113460690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/112910127113460690'/><link rel='alternate' type='text/html' href='http://arattaikutcheri.blogspot.com/2005/10/blog-post.html' title='ராஜ்குமார் பாரதி'/><author><name>Kannan</name><uri>http://www.blogger.com/profile/10853363475302869506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10025998.post-111919353573613465</id><published>2005-06-19T08:00:00.000-07:00</published><updated>2005-06-19T08:05:35.743-07:00</updated><title type='text'>இசைக் கலைஞர்களின் இசைக் கலைஞர்...</title><content type='html'>முன்குறிப்பு: புது வீடு வந்ததில் சில பழைய பதிவுகளை மீண்டும் பதியத் தோன்றியது. அந்த வகையில் ஒன்று...&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துவில் திடீரென்று &lt;a href="http://www.hindu.com/2004/08/15/stories/2004081501322200.htm"&gt;MD ராமனாதனை&lt;/a&gt;ப் பற்றிய இந்தக் கட்டுரை முளைத்தது. (அவரின் பிறந்த நாளை ஒட்டியோ? தெரியவில்லை) ராமனாதன் நிதானமாகப் பாடும் உத்தியைக் கையாளுபவர். 'விளக்கெண்ணை குடித்தவர்' என்றும் 'இழு இழுன்னு இழுப்பார்' என்றும் சிலர் குறை கூறுவர். 'இதெல்லாம் ஒரு நல்ல சங்கீதமா' என்றும் கேட்பவர் உண்டு. நல்ல சங்கீதம் என்பதைப் பலரும் அவரவர் அளவுகோல்களை வைத்துப் பார்த்துக் கொள்வர். ஒருவரின் ரசனை, மற்றொருவரினின்றும் வேறுபட்டு இருப்பதில் வியப்பில்லை, தப்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கேட்பின், நல்ல சங்கீதம் ஒரு ஆழ்ந்த தேடல் என்று எனக்குப் படுகிறது. எதைத் தேடுகிறோம் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை; ஆனால், தேடும் பொருள் கிடைக்காததின் ஏக்கம் புலனாகிறது. ஸ்வரங்களின் ஆழத்தில் , சுருதியோடிணைந்த இந்தத் தேடலில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அனுபவங்களாக சிலவை கிட்டும். இசையின் எழிலின் சில காட்சித் தெறிப்புக்கள் (glimpes?) ஆகத் தோன்றும் இவை இந்தத் தேடலில் கிட்டும் உபரி இன்பம் மட்டுமேயென்றால், இதன் உச்சம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இசையைக் கேட்பவர்களுக்கு இந்த உன்னத அனுபவத்தைக் கொடுக்க நல்ல வித்தை கைவரப் பெற்றவராலேயே முடியும். நான் நினைத்துக் கொண்டிருக்கிற உச்சம் ஒரு மனிதர் கொடுக்கவோ, கேட்பவர் பெற்றுக்கொள்ளவோ முடியாத காரியம் என்று தோன்றும். நான் போகும் இசை நிகழ்ச்சிகளில் எனக்கு ஒரு முறை இந்த இன்ப அதிர்ச்சி ஏற்பட்டாலே ஆச்சரியம். மனதுக்கு நிறைவான கச்சேரிகள் என்று நான் இந்த அளவுகோலை வைத்தே சொல்லுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமனாதனின் இசையில் இந்தத் தேடல் இருக்கும். நாமும் இந்தத் தேடலில் பங்கு கொள்ளலாம். என் நண்பர் ஒருவர் சொன்னது போல, அவரது தன்னறியாமையுடன் சேர்ந்த நேர்மை (innocently sincere performer) அவர் இசையின் முக்கிய அம்சம் என்று நான் கருதுகிறேன். இதுவே பல ரசிகர்களை அவர்பால் ஈர்த்துள்ளது. Presentation (அணிந்தளித்தல்?) என்ற அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், மனதில் தோன்றியதை அப்படியே பாசாங்கின்றி, ஒப்பனைகள் இன்றிக் கேட்பவர் முன் அழித்து வைக்கும் அவரது பாணி எனக்கு மிகவும் பிடித்தது. 'பாதாள ச்ருதி' என்று விமரிசிக்கப் படும் இவர் ச்ருதிக்கு பக்க வாத்தியங்களைத் தளர்த்திச் சேர்க்க வேண்டும். வயலின் கம்பிகள் தொளதொளக்க, மிருதங்கம் தப் தப்பென்று திண்மை குறைந்தும் இருந்தாலும், அதிலும் ஒரு தனி ஈர்ப்பு இருக்கவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை வானொலியின் மாலை 6:10 க்கான இசைமாலை நிகழ்ச்சியில் இவரது 'ஸாமஜ வரகமனா' என்ற ஹிந்தோள ராகப் பாடல் என்னைச் சிறுவயதிலேயே கவர்ந்தது. அதே மாதிரி இழுத்துப் பாடி காட்டுவதில் அப்போது நான் கில்லாடி. ஸஹானாவில் 'கிரிபை நெலகொன்ன' என்ற தியாகைய்யர் கீர்த்தனை இவர் குத்தகைக்கு எடுத்தது. தம்மை இன்னும் 10 நாட்களில் வந்து கூட்டிச் செல்வதாக இராமன் எனக்கு மலைமேல் காட்சி தந்து சொன்னான் என்று அவர் உருகிப் பாடியது, ராமனாதனின் பாட்டில் நம் கண் முன்னே நிறுத்துவது. ஆழ்ந்த ரசனையுடனும், பாவத்துடனும் பாடும் இவரின் குருபக்தி மிதமிஞ்சியது. 300 பாடல்கள் (தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்) புனைந்த்திருக்கும் இவர் தம் முத்திரையாக 'வரத தாச' என்று தமது குரு டைகர் வரதாச்சாரின் நினைவாக வைத்துள்ளார். இவருக்குச் சங்கீத கலாநிதி பட்டம் வழங்கப்படவில்லை என்பதில் பலருக்கும் வருத்தம். ஆனால், அந்த விருதைவிட இவர் பெரியவர் என்பது என் எண்ணம். இவருக்கும் கொடுத்திருந்தால் அந்த விருதே இன்னும் மரியாதைக் குரியதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மரபை வளர்க்க நல்லதொரு சீடர் பரம்பரை இல்லாதது நமக்குப் பேரிழப்பாகும். இவரது பழைய ஒலிப் பேழைகளை, சங்கீத சபாக்களும், இந்திய வானொலியும் எல்லோருக்கும் கிடைக்கும்படி வெளியிட்டால் அவர்களுக்கும் சந்ததியினருக்கும் தண்ணீர் லாரியின் தயவின்றி வீட்டுக் கிணற்றிலேயே வற்றாத நல்ல தண்ணீர் கிட்டுவதற்குப் பிரார்த்திப்பேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10025998-111919353573613465?l=arattaikutcheri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arattaikutcheri.blogspot.com/feeds/111919353573613465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10025998&amp;postID=111919353573613465' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/111919353573613465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/111919353573613465'/><link rel='alternate' type='text/html' href='http://arattaikutcheri.blogspot.com/2005/06/blog-post.html' title='இசைக் கலைஞர்களின் இசைக் கலைஞர்...'/><author><name>Kannan</name><uri>http://www.blogger.com/profile/10853363475302869506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10025998.post-111200140605063093</id><published>2005-03-28T01:06:00.000-08:00</published><updated>2005-03-28T01:16:46.053-08:00</updated><title type='text'>SRJ-யுடன் ஆறுமணிநேரம்</title><content type='html'>பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். பொதிகை தொலைக்காட்சியில் அவரது கச்சேரி ஒன்றைப் பார்த்தி(கேட்டி)ருக்கிறேன். நேரில் கேட்கும் வாய்ப்பு இந்த வாரயிறுதியில் தான் வாய்த்தது. பெங்களூரில் சங்கீத ஆர்வமுள்ள சில இளைஞர்கள் மல்லேசுவரம் அனன்யாவில் விளக்கங்களுடன் கூடிய கச்சேரி என்று சனியும், ராகமாலிகைகள் பற்றிய உபன்யாசம் என்று ஞாயிறும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் சார்ந்த துறையில் ஒரு அதி-தீவிரமான ஈடுபாடு கொண்டவர் என்பது தெரிந்தது. சில விஷயங்களை நினைவுகூரும்போது உணர்ச்சிவசப் படுகிறார். ஆனாலும் உடனே சுதாரித்துக்கொண்டு இயல்புக்கு வரச்செய்ய அவருக்கு நகைச்சுவை உணர்வும், சங்கீத அறிவின் ஆளுமையும் கை கொடுக்கின்றன. அதிலிருந்து சில...&lt;br /&gt;&lt;br /&gt;- ஆரபி ராக பஞ்சரத்தினத்தை எடுத்துக்கொண்டார். "ஸாதிம்செனே" (சாதித்தேன்) என்பதை "ஸாதிம்சனே" (சாதிக்கவில்லை) என்று பாடுவதன் பொருள் விபரீதம் குறித்துப் பேசும்போது, "ஸமயானிகிதகு" என்ற சரணம் பாட்டின் கடைசியில் தான் வர வேண்டும் என்றும், இடையில் வரும் ஸ்வர-சாகித்தியம் "ஸாதிம்செனே" என்பதில் தான் பாடவேண்டும் என்று சொல்லி, பாடியும் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- கச்சேரிகளில் விவாதி ராகங்களைப் பாடக்கூடாது என்ற கூற்று விபரமறியாதவர் கூற்று என்றார். ஏன் கனகாங்கி போன்ற ராகங்களைக் கச்சேரியில் பாடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயம் குறித்து எனக்கே முரணான இரு கருத்துகள் உண்டு. இப்போது நாம் அறியும் ராகங்களின் நீள-அகலப் பரப்புகள் விஷயமறிந்த வாக்கேயக்காரர்களால் நிறுவப் பெற்றது. இது கல்யாணி பிடி, இது பேகடாவின் 'ம(த்யமம்)' என்பது போல நம்மால் வகை பிரிக்க முடிகிறது. ஆனால் அதிகம் வாக்கேயக்காரர்கள் கையாளாத ராகங்களின் அடையாளங்களை நமக்கு இப்போது அறிந்த ராகங்களின் சாயலைக் கொண்டே நிறுவுகிறோம் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு, பஞ்சமம் வரை கரஹரப்ரியாவும், அதற்கு மேல் சங்கராபரணமும் வரும் ஸ்வர அமைப்பைக் கொண்டது கௌரிமனோஹரி ராகம். ஆனால், கரஹரப்ரியா, சங்கராபரணம் ஆகிய ராகங்களின் அடையாளம் இன்றி, தனியான அடையாளத்தைக் கொண்டது கௌரிமனோஹரி. இதற்குக் காரணம், இந்த ராகம் விஷயமறிந்தவர்களால் திறமையாகக் கையாளப்பட்டதே என்று நினைக்கிறேன். இதேபோல, அதிகம் பிரபலமடையாத ராகங்களைப் பாடும்போது, அவைகளின் தனி அடையாளங்கள் தெரியாததால், ஆரோகண அவரோகணங்களை விட்டு பிழறாமல், அண்டை ராகங்களின் சாயல் வராமல்  பாடுவதென்றால், ஒரு பத்து நிமிடம் பாடலாம். இதில் நான் தானம்- பல்லவி பாடுவேனாக்கும் என்று கற்பனை வறட்சியில் பிடித்த பிடிகளையே பிடித்துக்கொண்டு தொங்கினால் அயற்சி நமக்கும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இப்படி யாராவது முதலில் ராகத்தைக் கையாண்டு, உலகிற்கு அறிமுகப்படுத்தினால்தானே அவையும் பழகும்? இம்மாதிரி யாராவது பரிசோதனை முயற்சியில் இறங்கினாலே விமரிசனங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பழைமைவாதம் பாராட்டும் (என்னையும் சேர்த்து) அமைப்பில், ஜானகிராமன் போன்றவர்களின் பங்களிப்பு இசையைக் காப்பாற்றி, பேணுவதில் முக்கியமானது என்றும் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆலாபனையின்போது மேல் ஸ்தாயிகளில் சஞ்சாரம் செய்துவிட்டு, கீழே வந்தால் எப்படி "சட்ஜமே கேக்காது" என்பதைச் சொல்லி, "அங்கே மேலே நன்றாக வெளுத்து வாங்கிவிட்டு, இங்கே கீழே வந்தால் புகையும்" என்று நையாண்டி செய்தார். ஒலிபெருக்கி வசதிகள் இல்லாத காலத்தில் மணிக்கணக்காகப் பாடியவர்களை நினைத்துக் கொண்டேன். இப்போது அவ்வசதிகளுடனேயே இரண்டு மணிநேரம் பாட stamina நிறையத் தேவை!&lt;br /&gt;&lt;br /&gt;- ராகமுத்திரைகளை பாடல்களில் சாமர்த்தியமாகச் செருகுதல் பழைய வாக்கேயக்காரர்களுக்கே கைவந்தது என்றார். இப்போது வரும் "தோடி ராகப்ரியே", "சங்கராபரண ராகப்ரியே" போன்ற 'அச்சுப்பிச்சுத் தனமான' பிரயோகங்களுகுக்கும் அந்நாளைய புனைவுகளுக்கும் உள்ள ஆழத்தின் இடைவெளியைச் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;- ராகமாலிகைகளில் சிறிய கால அளவுக்குள் ஒரு ராகத்தின் முழு வீச்சையும் படம் பிடித்துக் காட்டும் பழைய இசை வல்லுனர்களின் திறமையை எடுத்துக் காட்டினார்.  இப்படி சட்டென்று போட்டு உடைக்காமல், ஒரு ராகத்தைப் பாடும்போது அது என்னவென்று தெரிந்து விடாமல், இன்னொரு ராகம் போலப் பாடிக் கடைசியில் இன்ன ராகம் என்று கண்டுகொள்ளும்படி  "ஏமாற்றக் கூடாது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி முடிந்ததும் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது இன்னாளில் இசை கற்கும், கற்பிக்கும் முறைகளில் மாறிவரும் சூழல் பற்றியும், கர்நாடக இசையில் மையமாக இருக்கும் பக்தி அம்சமும் பற்றிப் பேச்சு நீண்டது. இவையெல்லாம் பற்றியும் இன்னொரு சமயம் பதிய ஆசை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10025998-111200140605063093?l=arattaikutcheri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arattaikutcheri.blogspot.com/feeds/111200140605063093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10025998&amp;postID=111200140605063093' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/111200140605063093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/111200140605063093'/><link rel='alternate' type='text/html' href='http://arattaikutcheri.blogspot.com/2005/03/srj.html' title='SRJ-யுடன் ஆறுமணிநேரம்'/><author><name>Kannan</name><uri>http://www.blogger.com/profile/10853363475302869506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10025998.post-110517533043630730</id><published>2005-01-08T01:57:00.000-08:00</published><updated>2005-01-08T01:08:50.436-08:00</updated><title type='text'>புது வீடு!</title><content type='html'>&lt;a href="http://arattaikutcheri.rediffblogs.com"&gt;ரீடிஃபில் &lt;/a&gt;இருந்து இங்கே பெயர்ந்திருக்கிறேன். அவர்கள் டெம்ப்ளேட்டுடன் விளையாடித் தோற்றுவிட்டேன். (அவ்வளவாக விவரமும் பற்றாது) சென்றமுறை கொஞ்சம் பெரிய எழுத்தாகப் பதியலாம் என்று நான் போட்டது  தமிழ்மணத்தில் தூஈதூதூஈஈ என்று துப்பிவிட்டது. இந்த புளோகரில் கொஞ்சம் பரவாயில்லை - நான் எளிதாகக் கையாளும் வண்ணம் இருப்பதால் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல ஆதரிப்பீர்களாம்...&lt;br /&gt;&lt;br /&gt;- 'யளனகபக' கண்ணன்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10025998-110517533043630730?l=arattaikutcheri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arattaikutcheri.blogspot.com/feeds/110517533043630730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10025998&amp;postID=110517533043630730' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/110517533043630730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/110517533043630730'/><link rel='alternate' type='text/html' href='http://arattaikutcheri.blogspot.com/2005/01/blog-post.html' title='புது வீடு!'/><author><name>Kannan</name><uri>http://www.blogger.com/profile/10853363475302869506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10025998.post-110517664443366411</id><published>2005-01-08T01:29:00.000-08:00</published><updated>2005-01-08T01:30:44.433-08:00</updated><title type='text'>கர்நாடக இசை - டாப் 10!</title><content type='html'>சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, முழுக் கச்சேரிகள் கேட்க முடிவதில்லை. காலையில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, அம்மாவிடம் சண்டை போட்டு, கணக்காக 3 இட்லிகளோ, 2 மெல்லிசான தோசைகளோ, 1 அடையோ சாப்பிடும்போது, இல்லை ஒன்றரை கப் கஞ்சியோ குடிக்கும் போது சின்னதாக ஒரு பாட்டு கேட்பதுண்டு. இந்தப் பட்டியலும் மாதமொரு முறை மாறும். இப்படியாக ஒரு பத்து ஒலி நாடாப்பேழைகள்/குறுந்தகடுள் மேலாக இறைந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து, தற்போதைய டாப் 10:&lt;br /&gt;&lt;br /&gt;1. கமலாம்பா ஸம்ரக்ஷது -  TV சங்கரநாராயணன்&lt;br /&gt;        ராகம் : ஆனந்தபைரவி - தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;    சங்கர நாராயணன் மதுரை மணி அய்யரின் சிஷ்யர். பெரிய கணக்கு வழக்கெல்லாம் பண்ணாமல் ச்ருதி சுத்தமாகப் பாடுபவர். இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்க முதல் காரணம் அதன் ராகம். அருமையான மெட்டு. இதன் முடிவில் சின்னதொரு ஸ்வரப் ப்ரஸ்தாரம் உண்டு - வயலினில் MS கோபாலகிருஷ்ணன் பின்னுகிறார் - என்னே அவர் வாத்யத்தின் ஒலி - great tonal quality!&lt;br /&gt;&lt;br /&gt;2. தியாகராஜ யோக வைபவம் - கே வி நாராயணசாமி&lt;br /&gt;        ராகம் : ஆனந்தபைரவி - தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;    கேவிஎன் ! கர்நாடக சங்கீதத்தில் எனக்குப் பிடித்த குரல் இவருடையதுதான். இந்தப் பாட்டு இவர் குத்தகைக்கு எடுத்தது - இந்தப் பாடலைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் இவரைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியாது. அனுபவித்துக் கேட்க வேண்டியது. இதைக் காலையில் கேட்டுக் கண்கலங்கி, மனது லேசாகிப் போகும். அன்றைக்கு அலுவலகம் போகும் வழியில் எல்லாருக்கும் என் புன்சிரி பரிசாகக் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அம்பா பரதேவதே - ஆலத்தூர் சகோதரர்கள்&lt;br /&gt;    ராகம் : ருத்ரப்ரியா - கிருஷ்ணஸ்வாமி அய்யர் இயற்றியது&lt;br /&gt;    அருமையான ராகம், அற்புதமான பாட்டு. பாடலின் முடிவில் விறுவிறுப்பான கல்பனாஸ்வரங்கள் - லால்குடி ஜெயராமன் வயலின், பாலக்காடு மணி மிருதங்கம் - ஆஹா!&lt;br /&gt;&lt;br /&gt;4. குருலேக இதுவண்ட்டி - MD ராமனாதன் &lt;br /&gt;    ராகம் : கௌரிமனோஹரி - தியாகராஜர் இயற்றியது&lt;br /&gt;    திருவிளையாடலில் "பாட்டும் நானே" கேட்டிருப்பீர்கள் . அந்த ராகம். ராமனாதன் இந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தை, வரியையும் அனுபவித்துப் பாடியிருக்கிறார். இதிலும் கடைசியில் வரும் ஸ்வரங்கள் அருமை - TN கிருஷ்ணன் வயலினில் அசத்த, திருச்சி சங்கரன் கம்பீரமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;5. லம்போதரம் அவலம்பே - MD ராமனாதன்&lt;br /&gt;    ராகம் : காம்போதி - மைசூர் வாசுதேவாச்சார் இயற்றியது&lt;br /&gt;    காம்போதியில் பிள்ளையார் கிருதி. கச்சேரியின் ஆரம்பமே காம்போதி மாதிரி ஒரு ராகதில் அமைந்து, அதிலேயே நிரவல், ஸ்வரங்கள் என்று இருந்தால் எவ்வளவு நிறைவாக இருக்கும்! நிறைய யாரும் பாடாத கிருதி இது. ராமனாதன் காம்போதியை "சின்னஞ்சிறு திலகம் வைத்து, சிங்காரமாய் புருவம் தீட்டி, பொன்னாலான நகையும் பூட்டி" உலவ விடுகிறார். காலையில் கேட்டால் அன்று முழுதும் காம்போதி தான் மனத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;6. ஸ்ரீ நீலோத்பல நாயிகே - பாலமுரளி&lt;br /&gt;    ராகம் : ரீதி கௌளை - தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;    இந்த ராகம் ஆனந்த பைரவியின் உடன் பிறப்பு. நீலோத்பலாம்பா கிருதிகளும் இப்போது யாரும் நிறையப் பாடுவதில்லை. பாலமுரளி  பாடும்போது, லக்ஷ்மண் ஆன் டரைவ் ஆடுவது போல எளிமையாய்த் தோன்றும். கரடு முரடான சங்கதிகளையும் சாதாரணமாக, கவர்ச்சியாகப் பாடும் திறன் இவருக்கு. பாட்டும், நல்ல பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;7. சேத ஸ்ரீ பாலகிருஷ்ணம் - கேவிஎன்&lt;br /&gt;    ராகம் : த்விஜாவந்தி -  தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;   இந்த ராகத்தில் 'அகிலாண்டேச்வரி' என்று துவங்கும் பாடலும் இருக்கிறது - ஆனாலும், அதைவிட எனக்குப் பிடித்தது இந்தப் பாடல்தான். நாராயணசாமி இதை உருகிப் பாடும்போது பக்கவாத்யக்காரர்கள் அமைதியாகி விடுகிறார்கள் - அவர்களும் இந்தப் பாட்டில் மெய்மறந்து விட்டார்கள் போலும். ஆமாம், அது தான் சரி - மெய் மறத்தல் என்ற நிலை தான் இதைக் கேட்கும்போது எனக்கு ஏற்படுவது. இதுவும் ஒரு ஒட்டுவாரொட்டி - காலையில் கேட்டால் இதன் வாசனை இரவுத் தூக்கம் வரை நிலைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. ஆனந்த நடன ப்ரகாசம் - பாம்பே ஜெயஸ்ரீ ( ஒலிப்பேழை - "பஞ்சபூதம்")&lt;br /&gt;    ராகம் : கேதாரம் - தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;    நல்ல கர்நாடக இசையை interludes உடன் மெல்லிசை மாதிரிப் பாடுவது, எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இந்த வெளியீடு அருமையான ஒன்று. தீக்ஷிதர் பஞ்சபூதத் தலங்கள் மேல் பாடிய ஐந்து பாடல்கள் பின்னணி இசையுடன் (L வைத்தியநாதன்) வழங்கப் பட்டிருக்கிறது. ஜெயஸ்ரீயின் பாட்டு எனக்குப் பிடிக்கும். இந்தப் பாடல் (மற்ற பாடல்கள் போலவே) கர்நாடக சுத்தமாகப் பாடப் பட்டது. பின்னணி இசை இதற்கு மெருகூட்டுகிறதே தவிர, தொந்திரவு செய்யவில்லை. இந்தப் பாடல் ஆகாசத்தலமான  சிதம்பரம் குறித்தது&lt;br /&gt;&lt;br /&gt;9. ஸ்ரீ காளஹஸ்தீச - பாம்பே ஜெயஸ்ரீ ( ஒலிப்பேழை - "பஞ்சபூதம்")&lt;br /&gt;    ராகம் : ஹுஸேனி - தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;    இந்த ராகம் எனக்கு மிகவும் பிடித்தது. இது முகாரி, மற்றும் ஆனந்த பைரவி ராகங்களை முறையே 60 க்கு 40 என்ற விகிதத்தில் கலந்து, தாராளமாகத் தேனும் நெய்யும் வார்த்துப் பிடிக்கப்பட்ட உருண்டை போல எனக்குத் தோன்றும். இது ஜெயஸ்ரீ குரல், மற்றும் பின்னணி இசைக்காகப் பிடிக்கும். (தலம்: காளஹஸ்தி, பூதம் : காற்று)&lt;br /&gt;&lt;br /&gt;10. கமலாம்பாம் பஜரே - மதுரை மணி&lt;br /&gt;    ராகம் : கல்யாணி - தீக்ஷிதர் இயற்றியது&lt;br /&gt;    கமலாம்பா நவாவரணக் கீர்த்தனைகளில் கம்பீரமான ஒன்று இது. மதுரை மணியின் ச்ருதி சுத்தம் இவர் பாடல்களை இடையறாது கேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டுவது. இவரின் இன்னொரு சிறப்பு அம்சம் இவரி பாடும் கல்பனாஸ்வரங்கள் - ஸ்வரங்களின் கோர்வையை அழகழகான அடுக்குகளாகச் செய்து, இந்த அடுக்குகளை வித விதமான மாலைகளாய்க் கட்டும் வித்தை இவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. மொத்தத்தில் அருமை, அருமை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10025998-110517664443366411?l=arattaikutcheri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arattaikutcheri.blogspot.com/feeds/110517664443366411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10025998&amp;postID=110517664443366411' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/110517664443366411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10025998/posts/default/110517664443366411'/><link rel='alternate' type='text/html' href='http://arattaikutcheri.blogspot.com/2005/01/10.html' title='கர்நாடக இசை - டாப் 10!'/><author><name>Kannan</name><uri>http://www.blogger.com/profile/10853363475302869506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>1</thr:total></entry></feed>
